மண்டா முறை மீன்பிடி

ஆறு,கடல் இரண்டிலும் பயன்படுத்தப்படும் பாரம்பரிய நுட்பமுறைகளில் இதுவும் ஒன்று. இதில் மீனை ஏமாற்றிப்பிடித்தல் எனும் தொழிநுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
ஆறுகளில் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் ஓரு தோணியில் இருவர் செல்வர் அப்போது முன்னே உள்ளவர் சவளால் வலிக்க பின்னே உள்ளவர் கையில் மண்டாவுடன் தோணியின் பின்புறம் மீனை கவர்ந்திழுப்பதட்காக விசேடமாக உருவாக்கப்பட்ட மீனஒத்த அமைப்பினை நோக்கியவண்ணம் மண்டாவை மீனை நோக்கி வீசுவதட்க்கு ஆயத்தமாக எழுந்து நின்றுகொண்டிருப்பார்.
மீனானது தோனியின் பின் உள்ள வால் போன்ற அமைப்பினை கண்டு மீன் தான் செல்கிறது என ஏமார்ந்து பெரிய மீனான தோணியை பின்தொடரத்தொடங்கும் அப்போது அம்மீன் நீரின் மேல் மட்டத்திட்க்கு வரும் போது மீனவர் மண்டாவால் எறிந்து பிடிப்பர்.
மண்டாவால் எறிந்து மீன் பிடிக்கும் இன்னும் ஓர் தொழினுட்பமாக மீன் வரும் வரை ஓர் நிலையான பகுதியில் காத்திருந்து இரையை நீரினுள் எறிந்து அந்த இரையை எடுக்க வரும் மீன்களை மாண்டாவால் எரிந்தும் பிடிப்பர். இங்கு நிலையான பகுதி என குறிப்பிடப்படுவது நீர்நிலையில் உள்ள கல் அல்லது மீன் பிடிப்பதட்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
பொதுவாக மண்டாவினால் எறிந்து பிடிக்கப்படும் மீன் வகையாக ""கொடுவா"" குறிப்பிடப்படும்.நாம் பயன்படுத்தும் மண்டாவின் அலகின் அளவினை கொண்டு மீனின் அளவு மாறுபடும்.
நடுத்தரமான அளவு மண்டாவல் எறிந்து பிடிக்கப்படும் மீன் பொதுவாக 5-6Kg இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular Posts