ஓசைகள் இசைந்து உருவான தமிழ் !

ஓசைகள் இசைந்து உருவான தமிழ் !

"அ உ ஒ" என்ற மனித இயல்பு கத்தல் ஓசைகளை மட்டுமே ஆரம்பமாகக் கொண்டு உருவான மனிதனின் பேச்சு மொழியே(எழுதாக்கிளவி) தமிழ் மொழியின் ஆரம்பம் !

"அஉஒ" இந்த ஆதார கூட்டு ஓசையே "ம்" சேர்ந்து "அஉஒம்" (ஓம்) என்ற "இறை" ஓசையாக கொள்ளப்பட்டது.

"இ எ" ஓசைகள் பிறகு சேர்ந்தது தான்.

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஒ ஓ என்ற
10 உயிர் ஓசைகள்.(12 + 1 அல்ல)

(ஐ ஔ ஃ இவைகள் உயிர் ஓசைகள் இல்லை) அய், அவ், அக் என்ற கூட்டு ஓசை!

அது போலவே,

"க ச ட த ப ய ர ல வ ஞ ந ம" என்ற
12 மெய் ஓசைகள் மட்டுமே !(18 அல்ல)

(ற) (ழ - ள) (ங) (ன- ண) இவைகள்
"ர ல ஞ ந"  என்ற நான்கு மெய் ஓசையின்
மாறுபட்ட"ஒலி"கள்.

தமிழ் மொழிக்கான வரிவடிவ எழுத்துக் களை "தொலைத்து" விட்டு (?)

பின்னர் அந்த ஓசைகளுக்கான, வரிவடிவு மறைக்கப்பட்டு/மறக்கப்பட்டு, "வட்டு" எழுத்தாக உருவாக்கப்பட்ட போது ஏற்பட்ட, "மாற்று" எழுத்துக்களே !

12 வித மெய் ஓசை அதில் 10 வித உயிர் சேர்த்து 120  உயிர்மெய் ஓசைகள் தமிழில் !

இந்த ஒவ்வொரு "உயிர்மெய்" ஆதார ஓசை க்கும் "நான்கு" வித மாறுபட்ட "ஓலி"கள் உண்டு! (120 × 4 = 480.)

ஆக 480 வேறு பட்ட "ஒலி"கள் கொண்டது தமிழின் "ஓசை வளம்" !

உண்மையில் "சமஸ்க்ருத்" மொழியில் உள்ள ஹ, ஸ, ஷ, ஜ, மட்டுமல்ல, வேறு பல நுண் ஒலி ஓசைகளும் அதற்கு உண்டு!

அதற்கான "வரிவடிவங்கள்"ளையும் தன் வசம் கொண்டது தான் நம் பழந்தமிழின் எழுத்துக்கள்.

க முதல் ம வரை ஒவ்வொரு உயிர் மெய்யும் நான்கு விதமாக ஒலிக்க, புள்ளி/கீரல் போன்றவை பயன்படுத்தி "ஒலி மாற்று" செய்து, பல கோடி சொற்கள் உருவாக்கி, கல், பாறை வெட்டுகள், ஓலை சுவடிகள், மணல் பரப்பு, மரப்பலகை போன்ற எழுதும் தளங்களில் எடுத்தாளப்பட்டது.

"க்" என்ற மெய்+"அ" என்ற உயிர் சேர்ந்த பின்னரே "க" என்ற"உயிர்மெய்" ஓசை ஆகிறது.

க என்ற உயிர்மெய் 4 வித ஓசை கொண்டது!

க்+அ = க - க(ka)
க என்ற வட்டெழுத்து ஒன்று மட்டுமே.

ஆனால், பழைய வரிவடிவ எழுத்து நான்கு !
1. |<| (கச்சு-வின்- க-cuka
2. |<  (கரி-என்பதின் - க-ka
3. |>  (கடம்- என்ற - க-gha
4. |>| (ஹரி- என்ற - க-ha
(Cutch, Kari, Gadam, Hari)

இந்த120 உயிர்மெய் ஓசைகள் ஒவ்வொன்றும் 4 வித மாறுபட்ட ஒலி  (ஓசைகள்) கொண்டு உச்சரிக்க படவேண்டும் !

க்+அ=க - கச்சம்
க்+ஆ=கா - காதல்
க்+இ=கி - கிளி
க்+ஈ= கீ - கீழே
க்+உ=கு - குழல்
க்+ஊ=கூ - கூவல்
க்+எ = கெ - கெடு
க்+ஏ = கே - கேடு
க்+ஒ = கொ - கொடு
க்+ஓ = கோ - கோடு

தமிழின் ஓசைகள் துல்லியமான கட்டமைப்பும் இலக்கணமும்,கொண்டது !

ஊடுருவி உள்ளே நுழைந்த, ஜெர்மனியின் ஆரியர்களால், நமது தமிழ் எடுத்தாளப்பட்டு, (திருடப்பட்டு) அவர்கள் கொண்டு வந்த

மேம்படுத்திய, சீர் செய்யப்பட்ட, முழுமையாக்கப்பட்ட  மொழி என்ற அர்த்தம் கொண்ட (ஸம்+க்ருத்) என்ற பெயரில் வட மொழியாக்கப்பட்டுவிட்டது !

நமது மொழியின் வளம், திருடப்பட்டு சமஸ்கிருதத்துக்கு போய், தமிழில் அது மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டுபோனது!

இந்த நம் தமிழ்மொழியின் தொன்மை வரலாறு ஆய்வு செய்து மீட்டு எடுக்கும் முயற்சியை வெளி நாட்டு மொழி ஆராய்ச்சி வல்லுனர்கள் தான் இன்றளவும் செய்து வருகிறார்கள் !

Comments

Popular Posts